ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி நாணய கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டார். அதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என தெரிவித்தார். வங்கிகள் தரும் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவித்த அவர், ரெப்போ ரேட் விகிதம் 5.5 சதவீதம் ஆகவே தொடரும் என்று கூறினார். மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.

Night
Day